web log free
November 10, 2025

இரண்டாவது நாளாக தாதியர்கள் போரட்டம்


அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கம் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டம், இரண்டாவது நாளாகவும் இன்று தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஊதியப் பிரச்சினைக்கு தீர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து நேற்று காலை 7.00 மணி முதல் அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கத்தால் சுகயீன விடுமுறை போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தமது கோரிக்கைக்கு உரிய அதிகாரிகள் பதிலளிக்காமை காரணமாக, இன்றும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் முருத்தொட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.

பணிப்புறக்கணிப்பு காரணமாக, நாட்டிலுள்ள பல வைத்தியசாலைகளிலும் நாளாந்த செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd