web log free
February 07, 2026

பணிப்பெண் எண்ணிக்கையை குறைக்க நடவடிக்கை

பணிப்பெண்களாக வெளிநாடுகளுக்கு செல்லும் பெண்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மகளிர் விவகார அமைச்சர் சந்திராணி பண்டார தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில், “வெளிநாடுகளுக்கு பணிப்பெண்களாக செல்லும் பெண்களின் எண்ணிக்கையை குறைப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

பெண்கள் பணிப்பெண்களாக வெளிநாடுளுக்கு செல்கின்றமை காரணமாக பல்வேறு சமூகப்பிரச்சனைகள் ஏற்படுகின்றன. எனவே இதனைக் கருத்தில் கொண்டே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பெண்களுக்கான சுயதொழில் வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுப்பதற்கான விசேட வேலைத்திட்டம் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. மேலும், பெண்களுக்கு முச்சக்கர வண்டி சாரதி பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றது” என்றார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd