web log free
April 27, 2024

தேர்தலை தவிர்க்க முயற்சிகள்

மாகாண சபைகளின் தேர்தலை ஒரு வருடத்திற்கு ஒத்திவைக்கும் அதிகாரம் மாகாண சபைகள் அமைச்சருக்கு சட்டம் வழங்கியுள்ளது என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

டிசம்பர் (17) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“இதுவரை அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்படவில்லை, அதுவும் சமர்ப்பிக்கப்பட வேண்டிய அவசியமில்லை. மாகாண சபைகள் அமைச்சருக்கு தேர்தலை ஒரு வருடத்திற்கு ஒத்திவைப்பதற்கு சட்டம் அதிகாரம் வழங்கியுள்ளது” என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், மக்களின் கருத்துக்கள் பெறப்பட வேண்டும் என்பதால் கூடிய விரைவில் தேர்தலை நடத்த வேண்டும் என இராஜாங்க அமைச்சர் நாலக கொடஹேவா தெரிவித்துள்ளார்.

“முந்தைய அரசாங்கத்தின் போது ரணில் விக்கிரமசிங்கவினால் உருவாக்கப்பட்ட வடக்கு மக்களின் பெரும் பகுதியை நாம் இழந்துள்ளோம். மக்களின் கருத்து கேட்கப்பட வேண்டும், மேலும் அவர்கள் தங்கள் கருத்தை வெளிப்படுத்தக்கூடியவர்களாக இருக்க வேண்டும் என்பதால் எங்களுக்கு ஒரு தேர்தல் நடத்தப்பட வேண்டும்,” என்று கொடஹேவா கூறினார்.

தேர்தலை தவிர்க்கும் முயற்சிகளுக்கு ஆதரவளிக்கப்பட மாட்டாது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

 

 

 

 

 

 

 

 

 

Last modified on Sunday, 19 December 2021 14:58