web log free
April 27, 2024

திமுத் கருணாரத்னவுக்கு பிணை

இலங்கை கிரிக்கெட் அணியின் டெஸ்ட் போட்டி தலைவர் திமுத் கருணாரத்ன பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் மீதான இறுதி வாக்கெடுப்பு எதிர்வரும் வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.

மது போதையில் வாகனத்தினை செலுத்தி பொரளை, கின்சி வீதியில் விபத்தினை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில், திமுத் கருணாரத்ன ஸ்ரீலங்கா
பொலிஸாரால் இன்று கைதுசெய்யப்பட்டிருந்தார்.

கிரிக்கெட் வீரர் திமுத் கருணாரத்ன பயணித்த கார், முச்சக்கரவண்டியில் மோதி விபத்துக்குள்ளானதுடன், முச்சக்கரவண்டி சாரதி சிறு
காயங்களுடன் கொழும்பு, தேசிய் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வருகின்றார்.

ஸ்ரீலங்கா நேரப்படி இன்று அதிகாலை 5.15 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றதாகவும், காரை செலுத்திய திமுத் கருணாரத்ன, விபத்து ஏற்பட்ட
சந்தர்ப்பத்தில் மதுபோதையில் இருந்தமை தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

இதனையடுத்து, சந்தேக நபரான கிரிக்கெட் வீரர் திமுத் கருணாரத்னவ கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்த பொரளை பொலிஸார்,
அவரை பொலிஸ் பிணையில் விடுவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.