web log free
September 12, 2025

மின்வெட்டு தொடர்பில் திடீர் முடிவு

தேவைக்கேற்ப எரிபொருள் கிடைக்கும் பட்சத்தில் இன்றும் (25) நாளையும் (26) மின்வெட்டு அமுல்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

நேற்று (24) பிற்பகல் 100 மெற்றிக் தொன் எரிபொருள் கிடைக்கப்பெற்றதன் மூலம் எவ்வித மின்வெட்டு இன்றி மின்சார விநியோகத்தை மேற்கொள்ள முடியும் என மின்சார சபையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

போதியளவான எரிபொருள் விநியோகப்பட்ட காரணத்தினால் திட்டமிட்ட மின்வெட்டு அமுல்படுத்தப்படவில்லை என இலங்கை மின்சார பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தற்போதைய சூழ்நிலையில் எதிர்வரும் சில நாட்களுக்கு மின்வெட்டு இன்றி மின்சாரத்தை வழங்க முடியும் என அதன் குழு உறுப்பினர் எரங்க குடஹேவா தெரிவித்துள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd