web log free
May 18, 2024

அதிசயம் ஆனால் உண்மை!! நீர் கட்டணம் கூட செலுத்த வசதியில்லாத அமைச்சர்கள்!

உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து இதுவரை நீர் கட்டணத்தை செலுத்தாத 30 அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் நிலுவைத் தொகையை அவர்களின் மாதாந்த சம்பளம் அல்லது ஓய்வூதியத்தில் இருந்து ஒதுக்குமாறு நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சுக்கு பணிப்புரை விடுத்துள்ளது.
நிலுவைத் தொகையைச் செலுத்த வேண்டிய அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுமார் 40 பேர் உள்ளனர், அவர்களில் பத்து பேர் உயிரிழந்துள்ளனர்.
அமைச்சர் ஒருவரின் நிலுவைத் தொகை ரூ.20 இலட்சத்தை தாண்டியதாக சபை வட்டாரங்கள் தெரிவித்தன.
பட்டியல்களை விரைவாக செலுத்துவதற்கான இறுதி அறிவிப்புகளும் இந்த வாரத்தில் வெளியிடப்பட்டன. இதன்படி, தொடர்ந்தும் கட்டணம் செலுத்தத் தவறி வரும் மக்கள் பிரதிநிதிகளுக்கு சட்டத்தை அமுல்படுத்துமாறு விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர் வாசுதேவ நாணயக்கார பணிப்புரை விடுத்துள்ளார்.