web log free
May 17, 2024

தமிழீழ விடுதலை புலிகளை அழிக்க கருப்பு பணம் கொடுத்து வடகொரியாவிடம் ஆயுதம் கொள்வனவு செய்த இலங்கை!

 

நாட்டின் பொருளாதார பிரச்சினை மற்றும் டொலர் பற்றாக்குறை விடயத்தை சமாளிக்க கருப்பு பணச் சந்தையின் அவசியத்தை நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ உதாரணங்களுடன் வலியுறுத்தியுள்ளார்.

சிங்கள நாளிதழ் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை கூறியுள்ளார்.

இலங்கையில் யுத்தம் நடைபெற்ற காலத்தில் இராணுவத்திற்கு ஆயுதங்களை கொள்வனவு செய்யவென வடகொரியாவிற்கு கருப்பு பணம் வழங்கப்பட்டதாக பசில் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு - கோட்டை வர்த்தகர்களுடன் கலந்துரையாடி இந்த காலத்தில் எரிபொருள் இறக்குமதி செய்யவும் கருப்பு பணம் செலவிடப்பட்டதாக பசில் ராஜபக்ஷ கூறியுள்ளார்.

இலங்கை ஏற்கனவே பொருளாதார நிலையில் சர்வதேச நிறுவனங்களால் தரம் குறைக்கப்பட்டு வரும் வேளையில் கருப்பு பண சந்தையின் ஊடாக பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் இந்த கருத்து மிகவும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சிங்கள நாளிதழுக்கு அவர் வழங்கிய செவ்வி வருமாறு,