web log free
August 01, 2025

அநுரகுமார திஸாநாயக்கவை கொலை செய்ய முயற்சி!

கம்பஹா கலகெடிஹேன பிரதேசத்தில் தமது கட்சியின் பொதுக்கூட்டம் ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் அரசாங்கத்தின் செயல் மாத்திரமே என மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதிக்கு தெரிந்தே வர்த்தகர் நிஸ்ஸங்க சேனாதிபதியால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இதுவே தமது கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவை கொலை செய்யும் முயற்சியின் ஆரம்பம் எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

நிஸ்ஸங்கவின் தனிப்பட்ட மெய்ப்பாதுகாவலர்களே இந்த தாக்குதலில் ஈடுபட்டதாகவும் அவர் கூறினார்.

இணைய நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

 அடுத்த தேர்தலில் 75% ஆணை பெற்று அநுரகுமார திஸாநாயக்கவின் தலைமையில் ஜே.வி.பி அரசாங்கத்தை அமைக்கும் என்றும் அவர் கூறினார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd