web log free
February 02, 2026

நாடு முடக்கப்படுகிறாதா..

தற்போதைய சூழ்நிலையில் நாட்டை மூடும் அல்லது சுற்றுலாத்துறைக்கு கட்டுப்பாடுகளை விதிக்கும் திட்டம் எதுவும் இல்லை என இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.

அதிகரித்து வரும் COVID-19 நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்பான எதிர்கால நடவடிக்கை குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

தற்போதைய சூழ்நிலை காரணமாக கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டிய அவசியம் இல்லை, ஆனால் சுகாதார வழிகாட்டுதல்களை கடைபிடிப்பது மற்றும் பூஸ்டர் தடுப்பூசி கோவிட் 19 சவாலை சமாளிக்க உதவும், என்றார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd