web log free
May 20, 2024

கொரோனா தொற்று உள்ள மாணவர்கள் உயர்தர பரீட்சை எழுதுவது எப்படி? பதில் உள்ளே

 

கொவிட்-19 வைரஸ் தொற்றுக்கு உள்ளான பரீட்சார்த்திகள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பரீட்சார்த்திகளுக்கான விசேட அறிவித்தலை பரீட்சைகள் ஆணையாளர் வெளியிட்டுள்ளார்.

அதன்படி, சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலின் பேரில் வைத்தியசாலைகள் மற்றும் இடைநிலை கொவிட் சிகிச்சை மையங்களுடன் இணைந்து மாவட்ட அளவில் குறித்த பரீட்சார்த்திகளுக்கான பரீட்சை மையங்கள் நிறுவப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்தகைய விண்ணப்பதாரர்கள் நியமிக்கப்பட்ட சிறப்பு பரீட்சை மையங்களில் தங்கியிருந்து தேர்வு எழுத வேண்டும் என தெரிவிக்கப்படுகின்றது.