web log free
May 19, 2024

பெற்றோலிய கூட்டுத்தாபனமும் எரிபொருள் விலையை உயர்த்துகிறதா?

உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரிப்பு காரணமாக எரிபொருள் விற்பனையில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு பாரிய நட்டம் ஏற்படுவதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

கடந்த மாத கச்சா எண்ணெய் விலையுடன் ஒப்பிடும் போது ஒரு லீற்றர் டீசல் 35 ரூபாவிற்கும் ஒரு லீற்றர் பெற்றோல் 07 ரூபாவிற்கும் நஷ்டம் அடைவதாக அவர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், எரிபொருள் விலையை அதிகரிப்பது தொடர்பில் கூட்டுத்தாபனம் இன்னும் முடிவு செய்யவில்லை எனவும், இதனை முடிந்தவரை தாங்கிக் கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.