web log free
May 19, 2024

வருகிறது நாளாந்தம் மின்வெட்டு

இன்று (15) முதல் மின்சாரம் தடைப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நாளாந்தம் மின்வெட்டு ஏற்படலாம் என ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

நீர்த்தேக்கங்களில் உள்ள நீரை சேமிப்பதற்காகவும், எரிபொருள் பற்றாக்குறை காரணமாகவும் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, இந்த தீர்மானத்திற்கான மின்வெட்டு அட்டவணை இன்று பிற்பகல் அறிவிக்கப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கடந்த 12ஆம் திகதி பிற்பகல் இலங்கை மின்சார சபை மற்றும் லெகோ நிறுவனங்களுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் முடிவுகளுக்கு அமையவே பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இவ்வாறான மின்வெட்டுக்கு அனுமதி வழங்கியுள்ளது.

மின்வெட்டுக்கு அனுமதி கோரி பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் இலங்கை மின்சார சபை கோரிக்கை விடுத்திருந்த நிலையில், அதற்கான கலந்துரையாடல் இடம்பெற்றது.

மூன்று மாத காலத்திற்கு மின்வெட்டை மேற்கொள்ள இலங்கை மின்சார சபை அனுமதி கோரியிருந்தது.

Last modified on Tuesday, 15 February 2022 07:57