web log free
May 19, 2024

நாட்டில் அடுத்த வரப்போகும் தேர்தல் இதுதான்! உறுதிப்படுத்துகிறார் முக்கிய அமைச்சர்

2023 ஆம் ஆண்டின் முதல் சில மாதங்களுக்குள் பொதுத் தேர்தல் நடத்தப்படும் என்பதை ஒரு இராஜாங்க அமைச்சர் உறுதிப்படுத்தியுள்ளார்.

எம்பிலிப்பிட்டியவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போது ஜனக வக்கும்புர இராஜாங்க அமைச்சரே இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலின் போது கிடைத்த 69 இலட்சம் வாக்குகளையும் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலின் தலைவிதியையும் அவர் கணித்துள்ளார்.

அடுத்த பொதுத் தேர்தலில் மொட்டு அணிக்கு 79 லட்சம் வாக்குகள் கிடைக்கும் என அவர் கூறியுள்ளார்.

தற்போதைய அரசாங்கம் நிறைவேற்றியுள்ள அரசியலமைப்பின் 20வது திருத்தத்தின் பிரகாரம், இரண்டரை வருடங்களுக்குள் பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளது.

எதிர்வரும் மாகாண சபைத் தேர்தல் அல்லது ஒரு வருட கால நீடிக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு முன்னர் பொதுத் தேர்தல் நடத்தப்படும் என்பதை இராஜாங்க அமைச்சரின் கருத்து உறுதிப்படுத்துகிறது.