web log free
March 29, 2026

இலங்கையில் முஸ்லிம்கள் தொடர்பில் புதிய சட்டம்

முஸ்லிம் ஆண்களின் பல திருமணத்தை கடுமையான நிபந்தனைகளுடன் அனுமதிக்கும் கொள்கை முடிவு எடுப்பது உள்ளிட்ட முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து சட்டத்தில் திருத்தங்களைச் சேர்க்க நீதி அமைச்சு முடிவு செய்துள்ளது.

அரசியலமைப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவை துணைக் குழுவின் பரிந்துரையின் பேரில், நீதி அமைச்சு மார்ச் 8, 2021 அன்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், முஸ்லிம் ஆண்களின் பலதார மணத்தைத் தடை செய்யவும், புதிய சட்டங்களை அறிமுகப்படுத்தவும், காதி நீதிமன்றங்களை ஒழிக்கவும் முடிவு செய்தது.

எவ்வாறாயினும், இந்த தீர்மானத்திற்கு முஸ்லிம் சமூகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக நீதி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

முஸ்லிம் சமூகம் பலதார மணத்துக்கான சட்டங்களை மாவட்ட நீதிமன்றங்களில் சமர்ப்பித்துள்ளமையும் சட்ட தாமதத்திற்கு மற்றொரு காரணமாக இருப்பதால் காதி நீதிமன்றங்களில் சட்டத்தை அமுல்படுத்துவதே பொருத்தமானது என நீதி அமைச்சு கருதுகிறது.

தீர்க்க முடியாத பிரச்சினைகளை மாத்திரம் மாவட்ட நீதிமன்றத்திற்கு அனுப்ப வேண்டுமென நீதி அமைச்சு தீர்மானித்துள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd