web log free
June 26, 2025

இலங்கையில் அல்கொய்தா! பீதியில் மக்கள்..

கொடதெனியாவ வனாத்தமுல்ல பிரதேசத்தில் அல்கொய்தா எனப்படும் கும்பலால் மக்கள் துன்புறுத்தப்படுவதால் அப்பகுதி பெரும் பீதியடைந்துள்ளது.

இதனால் அச்சம் காரணமாக அப்பகுதி மக்கள் மாலை வீடுகளின் கதவு, ஜன்னல்களை பூட்ட நடவடிக்கை எடுத்தனர்.

கடந்த 15ம் திகதி, மூன்று மற்றும் ஆறு வயதுடைய இரண்டு சிறுமிகளைக் கொல்ல முயன்ற குண்டர் கும்பல், அதைத் தடுக்க வந்த வயதான தம்பதியினரைத் தாக்கியது கிராம மக்களின் அச்சத்தை அதிகப்படுத்தியது.

அதன் பின்னரே அப்பகுதி மக்கள் இதனை உடனடியாக நிறுத்தக் கோரி போராட்டம் நடத்தினர்.

எவ்வாறாயினும், அல்கொய்தாவுடன் தொடர்புடைய மற்றுமொரு நபரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த குழுவைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மற்றுமொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, அல்கொய்தா உறுப்பினர்களை கைது செய்தமை தொடர்பிலான மேலதிக விசாரணைகள் தொடர்பிலான விசேட கலந்துரையாடலொன்று நீர்கொழும்பு உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் கொடதெனியவில் இடம்பெற்றது.

இதில் பிரதேச மகா சங்கத்தினர், சமூக பொலிஸ் பிரிவைச் சேர்ந்தவர்கள் மற்றும் பிரதேசவாசிகள் கலந்துகொண்டனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd