web log free
September 19, 2024

டோர்ச் லைட்டுடன் பாராளுமன்றம் சென்ற எதிர்கட்சி எம்பி

 
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ பாராளுமன்றத்திற்கு டோர்ச் லைட்டுடன் வருகை தந்தார். 
 
மின்வெட்டு ஏற்பட்டால் மலசலகூடத்திற்கு பயன்படுத்தக் கூடிய வகையில் இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகளுக்காக டோர்ச் லைட் கொண்டு வந்ததாக சபைக்கு அறிவித்தார்.
 
அதன் பின்னர், அமைச்சர் தினேஸ் குணவர்தன, இவ்வாறான உபகரணங்களால் பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் எனவும், எனவே அவையில் அனுமதிக்கப்படக் கூடாது எனவும் சபாநாயகரிடம் தெரிவித்துடன் இதனால் அமைச்சர் தினேஸ் குணவர்தனவிற்கும் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோவிற்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
 
இதனால் ஏற்பட்ட குழப்பமான சூழ்நிலை காரணமாக பாராளுமன்றம் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.