web log free
February 02, 2026

நாட்டில் மீண்டும் கேஸ் தட்டுப்பாடா?

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக எரிவாயு விநியோகம் தடைப்பட்டுள்ளதாக ஹட்டன் மற்றும் பொகவந்தலாவ லிட்ரோ எரிவாயு விநியோகஸ்தர்கள் ஏசியன் மிரருக்கு தெரிவித்தனர்.

பல நாட்களுக்குப் பின்னர் இன்று (27) பொகவந்தலாவ பிரதேசத்தில் உள்ள லிட்ரோ எரிவாயு விநியோகஸ்தர்களுக்கு குறைந்த எண்ணிக்கையிலான எரிவாயு சிலிண்டர்கள் மட்டுமே வழங்கப்பட்டன.

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக எரிவாயுவை விநியோகிக்க முடியாதுள்ளதாக எரிவாயு நிறுவனம் தமக்கு அறிவித்துள்ளதாக விநியோகஸ்தர்கள் தெரிவிக்கின்றனர்.

தேவைக்கு ஏற்ற எரிவாயுவை நிறுவனம் வழங்குவதில்லை என்றும் எரிவாயு விநியோகஸ்தர்கள் தெரிவித்தனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd