web log free
April 26, 2025

அப்பாவைவிட மகன் ஒருபடி மேல் - ஜீவனை புகழும் ரமேஷ்

பண்டார நாயக்க குடும்பம் அரசியலுக்கு வரும்போதும் மஹிந்த ராஜபக்ஸ குடும்பம் அரசியலுக்கு வரும்; போதும் சந்தோசப்படும் சிலர் தொண்டமான் குடும்பம் அரசிலுக்கு வரும் போது மாத்திரம் குடும்ப அரசியல் வேண்டாம் என்கின்றனர்.

பெருந்தோட்டத்துறையில் எல்லோருக்கும் ஒரு ஆசையிருக்கிறது. இது சௌமியமூர்த்தி தொண்டமான் காலத்திலும் இருந்தது ஆறுமுகன் தொண்டமான் காலத்திலும் இருந்தது. ஆறுமுகன் தொண்டமான் மறைவுக்கு பின் நினைத்தார்கள் இதனுடன் எல்லாம் முடிந்து விட்டது ஆகவே பெருந்தோட்ட காணிகளை நாம் எப்படி வேண்டும் என்றாலும் கையாளலாம் என்று.

ஆனால் தொண்டமான் ஐயாவை விட ஒரு படி மேலே சென்று செயற்படும் அளவுக்குதான் ஜீவன் தொண்டமான் இன்று இருக்கிறார்.

எனவே, இதனை தாங்கிக்கொள்ள முடியாத சிலர் குடும்ப அரசியல் வேண்டாம் என தெரிவிப்பதாக நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நிதிச்செயலாளருமான மருதபாண்டி ரமேஸ்வரன் தெரிவித்தார்.

அக்கரபத்தனை பசுமலை நாகசேன வீதியினை இணைக்கும் குறுக்கு வீதி சுமார் 295 லட்சம் ரூபா செலவில் மத்திய மாகாண சபைக்கான நிதி ஒதுக்கீட்டில் காபட் இட்டு புனரமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd