web log free
September 16, 2024

வீட்டுக்குள் எரிபொருள் பதுக்கி வைத்திருக்கும் அமைச்சர்கள்! ஆளும் கட்சி எம்பி சாட்சி!

சுமார் ஒரு வருடத்திற்கு தேவையான எரிபொருளை வீட்டில் சேகரித்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

எரிபொருள் பற்றாக்குறைக்கு பயந்து தான் அவ்வாறு செய்ததாகவும், பல அமைச்சர்கள் இதேபோல் எரிபொருளை பதுக்கி வைத்திருப்பதாகவும் அவர் கூறினார்.

பெந்தர எல்பிட்டியவில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெண்கள் சம்மேளனத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.