web log free
April 26, 2025

அரசாங்கம் வங்குரோத்து நிலையில் , மக்கள் பாவம்!

இன்று நாடு உண்மையிலேயே வங்குரோத்து நிலையில் உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி விசேட விசாரணை ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“மக்களிடம் மருந்து பொருட்களை கொண்டு சேர்க்காத அரசு. பனடோல் மாத்திரையை மக்களிடம் கொண்டு சேர்க்காத அரசு. மேலும், குழந்தைகளுக்கு பால் மா கொடுக்காத அரசு. நெடுஞ்சாலைகள் அமைக்கத் தெரியாத அரசு. அப்படி அனுதாபம் இல்லாத மக்களைப் பற்றி கவலைப்படாத ஆட்சி இது. இந்த நாட்டைப் பற்றி, இந்த நாட்டு மக்களைப் பற்றி அவர்கள் எப்படி நினைக்கிறார்கள்? இது மக்களுக்கு ஏற்பட்ட மிக மோசமான அவமானம். பால்  மா, மருந்து, எண்ணெய், மின்சாரம் இல்லாமல் தவிக்கும் மக்களுக்கு நெடுஞ்சாலைகள் அமைப்பது மிகப்பெரிய அவமானம். எந்த வழியும் இல்லை. நாடு இப்போது உண்மையிலேயே வங்குரோத்து நிலையில் உள்ளது. என சம்பிக்க தெரிவித்துள்ளார். 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd