web log free
April 27, 2025

நாளையும் மறுதினமும் மின்வெட்டு!

நாளையும் நாளை மறுதினமும் மின்வெட்டு அமுல்படுத்துமாறு இலங்கை மின்சார சபை விடுத்த கோரிக்கைக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அதன்படி மின்வெட்டு அமுலாகும் மண்டலங்கள் மற்றும் நேரங்கள் பின்வருமாறு.

சனிக்கிழமையன்று

P Q R S T U V W பிரிவுகளுக்கு காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை 3 மணி நேரமும், மாலை 6.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை ஒரு மணி நேரமும்.

EF பிரிவுகளுக்கு நாளை காலை 8.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை 4 மணி நேரமும், மீண்டும் மாலை 4.30 மணி முதல் இரவு 10.30 மணி வரை 03 மணி நேரமும்

ஞாயிறு அன்று

A B C பிரிவுகளுக்கு காலை 9.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை 2 மணி 30 நிமிடங்கள் மட்டும் மின்வெட்டு அமுலாகும். 

எனினும் 5ஆம் திகதி முதல் மின்வெட்டு இருக்காது என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ கடந்த அமைச்சரவையில் தெரிவித்திருந்ததுடன் ஜனாதிபதியும் அவ்வாறு கூறியிருந்தார். 

 

Last modified on Friday, 04 March 2022 13:17
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd