web log free
December 08, 2025

தற்போது நடைமுறையிலுள்ள சுகாதார வழிகாட்டல்களில் மேலும் தளர்வு- கெஹலிய ரம்புக்வெல்ல

தற்போது நடைமுறையிலுள்ள சுகாதார வழிகாட்டல்களில் மேலும் தளர்வு தொடர்பான குறித்து அறிவிப்பு இன்று வெளியிடப்படும் என்று சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

கண்டியில் நடைபெற்ற நிகழ்வொன்றின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும், கொரோனா தொற்றாளர்களுக்கு வீட்டிலேயே சிகிச்சை அளிக்கும் முறை தற்போது வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், வீடுகளில் சிகிச்சை பெற்று வந்த சுமார் 150,000 பேர் தற்போது குணமடைந்துள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
 
  
 
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd