web log free
February 03, 2026

அவசரமாக கொழும்பில் கூடிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி

விமல் மற்றும் கம்மன்பில ஆகியோர் அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்ததை அடுத்து , ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்து அமைப்பாளர்களையும் கொழும்புக்கு வரவழைத்த மைத்திரி

இது கட்சியின் மறுசீரமைப்பு மற்றும் அபிவிருத்திச் செயற்பாட்டின் ஒரு பகுதி எனவும், இது முன் கூட்டியே ஏற்பாடு செய்யப்பட்ட சந்திப்பு எனவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.

கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

தற்போதைய அரசியல் சிக்கல்களை அடிப்படையாக கொண்டு கலந்துரையாடல் நடத்தப்பட்டு வருவதாகவும் திரு.பியதாச தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தற்போதைய அரசியல் நிலவரங்கள் மற்றும் இவைகள் கட்சியின் எதிர்கால சீர்திருத்தங்களில் எவ்வாறு தாக்கம் ஏற்படுத்தும் என்பன குறித்தும் அமைப்பாளர்களுடன் கலந்துரையாடப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார் .

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd