web log free
June 13, 2026

மேலும் சில தமிழக மீனவர்கள் கைது

 இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்து மீன் பிடித்த இலங்கை மீனவர்கள் 5 பேரை, இந்திய கடலோர பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். படகு பறிமுதல் செய்யப்பட்டது. 

இந்திய கடலோர காவல் படை கப்பல் 'வஜ்ரா' ரோந்து பணியில் ஈடுபட்ட போது கன்னியாகுமரி அருகே இந்திய எல்லைப் பகுதிக்குள் மீன் பிடித்த இலங்கை மீனவர்கள் ஐந்து பேரை கைது செய்தனர்.

இலங்கையின் புத்தளம் மாவட்டத்தைச் சேர்ந்த இவர்களை இன்று 10ம் தேதி காலை துாத்துக்குடி கொண்டு வருகின்றனர். மத்திய உளவுப் பிரிவு விசாரணைக்கு பிறகு துாத்துக்குடி தெர்மல்நகர் போலீசில் ஒப்படைக்கப்படுவர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd