web log free
March 29, 2026

நான்கு பிள்ளைகளின் தந்தை வெட்டிக் கொலை

மட்டக்களப்பு – கரடியனாறு, ஈரளக்குளம் குடாவெட்டை வயலில் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்.

4 பிள்ளைகளின் தந்தையொருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று(14) காலை கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட நிலையில் வெட்டுக்காயங்களுடன் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

நீதவான் விசாரணை மற்றும் பிரேத பரிசோதனைகளுக்காக சடலம் மட்டக்களப்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவத்துடன தொடர்புடைய சந்தேகநபரை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd