web log free
September 08, 2024

மொட்டு கட்சி பொதுச் செயலாளர் உயிருடன் இருக்கிறாரா?

ஜனாதிபதியினால் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட உதய கம்மன்பில நேற்று (14) பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைமையகத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தினார்.

அங்கு அவர் அரசாங்கத்தில் ஒரு குறிப்பிட்ட நபரைத் தேடினார், அவர் இன்னும் உயிருடன் இருக்கிறாரா, நன்றாக இருக்கிறாரா என்று கேள்வி எழுப்பினார்.

அவர்தான் மொட்டு கட்சியின் செயலாளர் சாகர காரியவசம்.

இலங்கை வரலாற்றில் அதிகூடிய எரிபொருள் விலையேற்றம் இடம்பெற்ற இவ்வேளையில் சாகர காரியவசம் வாய்மூடி இருப்பதை கம்மன்பில வெளிப்படுத்தினார்.

புதிய எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே பதவி விலக வேண்டும் என சாகர காரியவசம்  ஏன் இன்னும் கடிதம் எழுதவில்லை என அவர் கேள்கி எழுப்பினார்.

தான் எரிசக்தி அமைச்சராக இருந்தபோது ஜனாதிபதி மற்றும் பிரதமர் பரிந்துரையின் பேரில் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 7 ரூபாவால் அதிகரிக்கப்பட்ட போது, மொட்டுக்கட்சி பொதுச் செயலாளர் காரியவசம் உடனடியாக பதவி விலகுமாறு தமக்கு கடிதம் எழுதியதாக கம்மன்பில நினைவு கூர்ந்தார்.

தற்போது டீசல் ஒரு லீற்றர் 55 ரூபாவால் அதிகரிக்கப்படும் போது  காரியவசம் உயிருடன் இருந்திருந்தால் அவ்வாறான கடிதம் எழுதப்பட்டிருக்கும் என கம்மன்பில குறிப்பிட்டார். 

இக்காலத்தில் சாகர காரியவசம் உயிருடன் இருக்கிறாரா அல்லது இறந்துவிட்டாரா என்று கண்டுபிடிக்க முடியாத நிலையில் கம்மன்பில சொன்ன கதையில் ஓரளவு உண்மை இருப்பதாகத் தெரிகிறது.