web log free
September 08, 2024

சிக்குவாரா விமல்? லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு விசாரணை!

ஜனாதிபதியினால் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட விமல் வீரவன்ச தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு பூரண விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

2010-2014 வரை அவர் வீடமைப்புத் துறை அமைச்சராக இருந்த காலத்தில் நடந்த முறைகேடுகள் தொடர்பிலும் அரச சொத்துக்களை தவறாக பயன்படுத்தியமை தொடர்பிலும் அரச சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பிலும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

அப்போது அரச பொறியியல் கூட்டுத்தாபனம் விமல் வீரவன்சவின் அமைச்சின் கீழ் இருந்தது.

அரச பொறியியல் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான வாகனங்கள் பல முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு கிடைத்த முறைப்பாடு தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பொறியியற் கூட்டுத்தாபனத்தின் போக்குவரத்து முகாமையாளர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டு நீண்ட நேரம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

அந்தக் காலப்பகுதியில் தனது உறவினர்களுக்கு வீடுகளை வழங்கியதாக வீரவன்ச மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இது தொடர்பாக இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.