web log free
May 10, 2025

கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக அமெரிக்காவில் வழக்கு

சண்டே லீடர் பத்திரிகை ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை சம்பவம் தொடர்பில் முன்னாள் பாதுக்காப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

லசந்த விக்ரமதுங்கவின் மகளான அஹிங்சா விக்ரமதுங்கவினால் இந்த வழக்கு அமெரிக்க நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில், முன்னாள் பாதுக்காப்புச் செயலாளர் கோட்டாபயராஜபக்ஷவை அமெரிக்க நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அந்நாட்டு அதிகாரிகளினால் நேற்று (07) இரவு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

எனினும், கேட்டாபய ராஜபக்ஷ குடும் நிகழ்வொன்றில் கலந்துகொள்வதற்காக தற்போது அமெரிக்காவில் உள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்களை மேற்கொள்காட்டி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Last modified on Wednesday, 11 September 2019 01:48
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd