web log free
September 08, 2024

இன்றும் நாளையும் மின்வெட்டு அமுலில்

நாட்டில் இன்றும் நாளையும் மின்வெட்டு அமுல்படுத்தப்படுவதாக பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
சனிக்கிழமை இதற்கிணங்க, P,Q,R,S,T,U,V,W பிரிவுகளில் காலை 10 மணி முதல் மாலை 4 மணிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் 1 மணித்தியாலங்கள் 30 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படுவதாக பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அந்த பிரிவுகளில் மாலை 4 மணி முதல் இரவு 10 மணிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் 1 மணித்தியாலம் 30 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

A,B,C,D,E,F,G,H,I,J,K,L பிரிவுகளில் காலை 8 மணி முதல் மாலை 6 மணிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் 2 மணித்தியாலங்கள் 30 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
அந்த பிரிவுகளில் மாலை 6 மணி முதல் இரவு 11 மணிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் 1 மணித்தியாலம் 15 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை P,Q,R,S,T,U,V,W பிரிவுகளில் மாலை 4.30 மணி முதல் இரவு 9.30 மணிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் 1 மணித்தியாலங்கள் 15 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படுவதாக பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

A,B,C,D,E,F,G,H,I,J,K,L பிரிவுகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் 2 மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
அந்த பிரிவுகளில் மாலை 5 மணி முதல் இரவு 10 மணிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் 1 மணித்தியாலம் 15 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.