web log free
September 08, 2024

எரிபொருள் நிரப்பு நிலைய மோதலில் ஒருவர் பலி

நிட்டம்புவ - ஹொரகொல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் நேற்றிரவு இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்எரிபொருள் பெற்றுக்கொள்வதற்காக வருகை தந்திருந்த இளைஞரொருவருக்கும், முச்சக்கரவண்டி சாரதிக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.


இந்த சந்தர்ப்பத்தில் குறித்த இளைஞர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில் வத்துப்பிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எனினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.


சம்பவ இடத்திலிருந்து சந்தேகநபரான முச்சக்கரவண்டி சாரதி தப்பியோடிய நிலையில், சம்பவம் தொடர்பான விசாரணைகளையும் சந்தேகநபரை தேடும் நடவடிக்கையையும் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Last modified on Monday, 21 March 2022 10:15