web log free
September 07, 2024

பிரதமர் மஹிந்த தெரிவித்ததாக வெளியாகியுள்ள அதிர்ச்சி தகவல்

புதிய பிரதமருக்கு உணவு பரிமாறுவதற்கு தயாராகுங்கள் என அலரிமாளிகையின் சமையல்பிரிவை சேர்ந்தவர்களிற்கு பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

அலரிமாளிகையின் சமையல்பிரிவை சேர்ந்தவர்களுடன் உரையாடியவேளை புத்தாண்டின் பின்னர் புதிய பிரதமர் அலரிமாளிகைக்கு வருவார் என மகிந்த ராஜபக்ச தெரிவித்தார் என தகவல்கள் வெளியாகின்றன.

எனக்கு சிறந்த முறையில் உணவுவழங்கியதை போல புதிய பிரதமருக்கும் உணவு வழங்குங்கள் என பிரதமர் தெரிவித்தார் என தகவல்கள் வெளியாகின்றன.

நாடு தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடியை தீர்ப்பதற்காக புதிய பிரதமர் நியமிக்கப்படுவார் அரசியல் மோதல் எதுவுமில்லை எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

எனினும் பிரதமரின் ஊடகபேச்சாளர் இந்த செய்தியை உறுதிப்படுத்தவில்லை என இணைய ஊடகமொன்று தெரிவித்துள்ளது.