web log free
September 08, 2024

நாட்டின் முன்னணி அரச வங்கியொன்று இலங்கை மின்சார சபையின் அனைத்து காசோலைகளையும் திருப்பி அனுப்பியது

நாட்டின் முன்னணி அரச வங்கியொன்று இலங்கை மின்சார சபையின் அனைத்து காசோலைகளையும் திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கை மின்சார சபையின் கணக்குகளில் பணப்பற்றாக்குறை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சேவை சங்கத்தின் செயலாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார்.

எனவே, இலங்கை மின்சார சபைக்கு வங்கி மிகைப்பற்று வழங்குவதை நிறுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். காசோலைகளை வங்கிக்கு அனுப்ப வேண்டாம் என இலங்கை மின்சார சபையின் பண முகாமையாளர் ஏற்கனவே சபைக்கு அறிவித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது நிலவும் நெருக்கடியான சூழ்நிலையில் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும், பண்டிகை மாத சம்பளத்தை வழங்க முடியாத அளவுக்கு நெருக்கடி ஏற்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.