web log free
February 04, 2026

துப்பாக்கி மற்றும் ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண்ணொருவர் கைது

திருகோணமலை சீனக்குடா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சமன்புர பிரதேசத்தில் கட்டுத்துவக்கு மற்றும் ஹெரோயின் போதைப் பொருளுடன் பெண் ஒருவரை கைது செய்துள்ளதாக சீனக்குடா பொலிசார் தெரிவித்தனர்
 
சீனக்குடா இரகசியப் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து  (26) காலை குறித்த வீட்டை சோதனையிட்டபோது அனுமதிப்பத்திரம் இன்றி வைத்திருந்த கட்டுதுவக்கு ஒன்றும் 100 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சீனக்குடா போலீசார் தெரிவித்தனர்
 
இவ்வாறு சோதனைக்கு உட்படுத்தப்பட்ட வீட்டில் இருந்து 33 வயதுடைய பெண்ணொருவரை சந்தேகத்தின் பெயரில் கைது செய்துள்ளதாகவும் குறித்த பெண் வழங்கிய வாக்குமூலத்திற்க்கு அமைய கைப்பற்றப்பட்ட கட்டுத்துவக்கு மற்றும் ஹெரோயின் போதைப் பொருள் தனது தந்தையுடையது எனவும் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது
 
மேலும் குறித்த பெண்ணின் தந்தை வீட்டில் இருக்கவில்லை எனவும் வேலை நிமிர்த்தம் கொழும்புக்குச் சென்று இருந்ததாகவும் குறித்த பெண் வாக்குமூலம் அளித்துள்ளார்
 
இவ்வாறிருக்கையில் குறித்த பெண்ணின் தந்தையை சீனக்குடா பொலிஸ் நிலையத்தில் ஆஜராகுமாறு தகவல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் சீன போலீசார் தெரிவித்தனர்
 
மேலும் தம்வசம் அனுமதிப்பத்திரம் இன்றி துப்பாக்கி வைத்திருந்தமை மற்றும் போதைப் பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் சந்தேக நபரை கைது செய்துள்ளதாகவும் குறித்த பெண்ணை  நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சீனக்குடா பொலிசார் மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd