web log free
September 08, 2024

ஆய்வுக்கட்டுரை எழுத வந்த வெளிநாட்டுப் பெண்ணின் கற்பை சூறையாட முயன்ற ஹோட்டல் உரிமையாளர் கைது

சிகிரியா, எஹெலகல பிரதேசத்தில் இலங்கைக்கு வருகை தந்த பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த பெண்ணின் பிறப்புறுப்பை தொட்டு துஷ்பிரயோகம் செய்ய முயன்ற ஹோட்டல் உரிமையாளரை சீகிரிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.

33 வயதான பெல்ஜிய சுற்றுலா பயணி ஒருவர் மார்ச் 3-28 ஆம் திகதி சிகிரியா பொலிஸில் செய்த முறைப்பாட்டையடுத்து இந்த கைது இடம்பெற்றுள்ளது.

இந்த பெண் பல்வேறு நாடுகளுக்குச் சென்று சம்பந்தப்பட்ட நாடுகள் தொடர்பில் சஞ்சிகைகளுக்கு கட்டுரைகளை எழுதி வருவதாகவும், இம்முறை இலங்கை தொடர்பான கட்டுரையை எழுதுவதற்காக இலங்கை வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அங்கு வந்த அவர், சிகிரியா பகுதியில் உள்ள சுற்றுலா விடுதியில் தங்குவதற்கு முன்பதிவு செய்துள்ளார்.

அந்தப் பெண்ணிடம் பேசிய ஹோட்டல் உரிமையாளர், தான் ஒரு சீன அக்குபஞ்சர் மருத்துவர் என்றும், பலவிதமான நோய்களுக்கு சிகிச்சை அளிக்க முடியும் என்றும், முதுகுவலியைச் சொல்லி, அவளது உடலின் பல்வேறு பாகங்களைத் தொட்டு, மார்பகங்களைத் தடவிவிட்டதாகவும், புகாரில் கூறப்பட்டுள்ளது. பிறப்புறுப்புகளையும் தடவ முயன்றார் என்று கூறப்படுகிறது. 

சம்பவத்தின் பின்னர் ஹோட்டலை விட்டு வெளியேறிய அவர் சீகிரிய பிரதேசத்தில் உள்ள மற்றுமொரு சுற்றுலா விடுதிக்கு சென்று சீகிரிய பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் சீகிரிய, எஹெலகல பிரதேசத்தை சேர்ந்த 49 வயதுடைய ஒருவரை சீகிரிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சீகிரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.