web log free
September 08, 2024

பெருந்தோட்டங்களில் தொழில் செய்வோருக்கு பத்தாயிரம் ரூபா நிவாரணம்

எதிர்வரும் 2 மாதங்களுக்கு அரசாங்கத்தால் வழங்கப்படவுள்ள பத்தாயிரம் ரூபா நிவாரண நிதி பெருந்தோட்டங்களில் தொழில் செய்வோருக்கும், தொழில் புரியாதவர்களுக்கும் வழங்கப்படவுள்ளது.

நிதியமைச்சர் பெசில் ராஜபக்ஸ இதனை தெரிவித்ததாக பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ. அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களை தெளிவுப்படுத்தியுள்ள அவர்…

“ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கு அரசாங்கத்தால் வழங்கப்படவுள்ள நிவாரண கொடுப்பனவு அதாவது தலா 5,000 ரூபா என்ற வகையில் இரண்டு மாதங்களுக்கும் பத்தாயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.

இதனை பெருந்தோட்டங்களில் தொழில் செய்வோருக்கும், தொழில் புரியாதவர்களுக்கும் பாரபட்சமின்றி வழங்கவுள்ளதாக நிதியமைச்சர் கூறினார். இந்த கொடுப்பனவு நிவாரண உணவு பொதியாகவோ அல்லது பணமாகவோ வழங்கப்படவுள்ளதாக அவர் கூறினார்.” என்றார்.

Last modified on Thursday, 31 March 2022 12:01