web log free
April 26, 2024

நாலக டி சில்வாவின் விளக்கமறியல் நீடிப்பு

பயங்கரவாதத் தடுப்புப் பிரிவின் முன்னாள் பணிப்பாளரான பிரதிப் பொலிஸ்மா அதிபர் நாலக டி சில்வாவின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய ஏப்ரல் 23 ஆம் திகதி வரையில் அவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரின் படுகொலை சதித்திட்டம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 25 ஆம் திகதி வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகிய நிலையிலேயே பிரதிப் பொலிஸ்மா அதிபர் நாலக டி சில்வா கைது செய்யப்பட்டிருந்தார்.

ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ச ஆகியோரை கொலை செய்வதற்கு சதித்திட்டம் தீட்டியதாக நாமல் குமாரவினால் தெரிவிக்கப்பட்ட தகவல்களை அடுத்தே அவர் கைதுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Last modified on Wednesday, 11 September 2019 01:48