web log free
September 08, 2024

ராஜபக்சக்கள் ஒன்றுகூடி மந்திராலோசனை!

இன்று (02) இரவு நுகேகொட மிரிஹானவில் உள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இல்லத்தில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த கலந்துரையாடலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோர் கலந்துகொண்டனர்.

தற்போதைய பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிக்கு முகங்கொடுக்கும் வகையில் விரைவில் எடுக்கப்பட வேண்டிய விசேட தீர்மானம் தொடர்பில் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.