web log free
March 30, 2026

அவசர நிலை பிரகடனத்தை வாபஸ் பெற்றார் ஜனாதிபதி

விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் ஜனாதிபதியால் நாட்டில் பிறப்பிக்கப்பட்ட அவசர நிலை பிரகடனம் மீளப் பெறப்பட்டுள்ளது.

அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தான் கடந்த ஏப்ரல் மாதம் முதலாம் திகதி பிறப்பித்த அவசர நிலை பிரகடனத்தை ஏப்ரல் 5ஆம் திகதி நள்ளிரவு முதல் மீளப் பெற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd