web log free
February 03, 2026

நான் நிதியமைச்சர் பதவியை பொறுப்பேற்க நிர்ப்பந்திக்கப்பட்டேன்-அலி சப்ரி

நிதியமைச்சர் பதவியை எவரும் பொறுப்பேற்க விரும்பாத காரணத்தினால் நான் நிதியமைச்சர் பதவியை பொறுப்பேற்க நிர்ப்பந்திக்கப்பட்டேன் என அமைச்சர் அலி சப்ரி இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

“தற்போதைய ஆபத்தான சூழ்நிலையில் விமர்சனங்களை எதிர்கொள்ள அனைவரும் அஞ்சுவதால், யாரும் அமைச்சுப் பதவியை ஏற்கத் தயாராக இல்லை. நான் என்ன சவால்களை எதிர்கொண்டாலும், நாட்டின் பொருளாதாரத்தை காப்பாற்ற நிதி அமைச்சராக இருந்து தேவையானதை செய்ய தயாராக இருக்கிறேன்,'' என்றார்.

"நான் அரசியலில் எனது கடைசி நாட்களில் இருக்கிறேன் என்பதை நான் அறிவேன் ஆனால் நான் செய்ய வேண்டியதைச் செய்வேன்," என்று அவர் கூறினார்.

“அதிகமான டாலர் வருவாயை உறுதி செய்வதற்கான வழிகளையும் வழிமுறைகளையும் அறிமுகப்படுத்துவதே இன்றைய தேவை. ஆளும் கட்சியில் இருந்துகொண்டு அரசாங்கத்தை பாதுகாக்க முயற்சிக்கும் SLPP பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நான் நன்றி கூறுகின்றேன்” என்றும் அவர் கூறினார்

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd