web log free
April 19, 2024

அவர்களை துரத்தியடித்த பின்னரே வெளியேறுவோம் - வீதியில் உறங்கும் இளைஞர்கள்

நாங்கள் இங்கேயே இருப்போம் அவர்களை துரத்தியடித்த பின்னர்தான் நாங்கள் இங்கிருந்து வெளியேறுவோம் என முன்னாள் இராணுவவீரரான 35 வயது புஸ்பகுமார தெரிவித்தார். 

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச பதவி விலகவேண்டும் என கோரி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளவர்கள் தொடர்ந்தும் காலிமுகத்திடலில் தங்கியிருந்து போராட தயாராகின்றனர். 

கடனில் சிக்குண்டுள்ள நாட்டின் அதன் வரலாற்றில் ஒருபோதும் இல்லாத நெருக்கடி காரணமாக ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச பதவி விலகவேண்டும் என கோரும் ஆர்ப்பாட்டக்காரர்கள் இரண்டாவது நாளாக நேற்று அவரது அலுவலகத்தின் வாயிலை ஆக்கிரமித்தனர்.

மழையையும் பொருட்படுத்தாமல் நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் குடை ரெயி;ன்கோர்ட்டுடன் அரசாங்கத்திற்கு எதிரான கோசங்களை எழுப்பினர்.

சிலர் இளம் தலைமைத்துவத்திற்கு வழிவிடுவதற்காக முழு நாடாளுமன்றத்தையும் கலைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.

நாங்கள் இங்கேயே இருப்போம் அவர்களை துரத்தியடித்த பின்னர்தான் நாங்கள் இங்கிருந்து வெளியேறுவோம் என முன்னாள் இராணுவவீரரான 35 வயது புஸ்பகுமார தெரிவித்தார்.  ராஜபக்ச குடும்பம் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறித்தே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

தமிழ்இன கிளர்ச்சியாளர்களிற்கு எதிரான இறுதிபோரில் போரிட்டதாக புஸ்பகுமார தெரிவித்தார்.

இரண்டரை தசாப்தகாலத்தின் பின்னர் இந்த யுத்தத்தில் இலங்கை படையினர் வென்றனர். அவ்வேளை பாதுகாப்பு செயலாளராக பணியாற்றிய ராஜபக்சவும் ஜனாதிபதியாகயிருந்த அவரது மூத்த சகோதாரரும்( தற்போதைய பிரதமர்) வெற்றிக்கான பெயரை பெற்றனர்.

நாங்கள் அவர்களை வீட்டிற்கு அனுப்புவோம், பொதுமக்களின் பணத்தை மீட்போம், அவர்களை சிறைக்கு அனுப்புவோம் என புஸ்பகுமார தெரிவித்தார்.

நாங்கள் காப்பாற்றிய நாட்டை இவர்கள் அழிக்கின்றனர். இராணுவம் பொலிஸார் அவர்களை பாதுகாப்பது கவலையளிக்கின்றது என புஸ்பகுமார தெரிவித்தார்.

ஆர்ப்பாட்டக்காரர்களிற்கு ஆதரவாளர்கள் உணவு தேநீர் ரெயின்கோட் போன்றவற்றை விநியோகம் செய்தனர்.

25 பில்லியன் கடனில் சிக்குண்டுள்ள தென்னாசிய நாடு வங்குரோத்தாகும் நிலையில் உள்ளது. இந்த வருடம் மாத்திரம் 7 பில்லியன் டொலர் கடன் செலுத்த வேண்டியுள்ளது.

அந்நிய செலாவணி கையிருப்புகள் குறைவடைந்துள்ளன. சர்வதேச நாணய நிதியத்துடன் இந்த மாத இறுதியில் பேச்சுவார்த்தைகள் எதிர்பார்க்கப்படுகின்றன. உணவு எரிபொருளிற்காக அரசாங்கம் சீனா இந்தியாவிடம் அவசர கடனுதவியை நாடியுள்ளது.

ஆர்ப்பாட்டக்காரர்களின் சீற்றம் அதிகளவிற்கு இரண்டு தசாப்தங்களாக ஆட்சியில் உள்ள ராஜபக்ச குடும்பத்திற்கு எதிரானதாக காணப்படுகின்றது.

இதேவேளை எந்த வருமானத்தையும் ஈட்டித்தராத கொழும்புதுறைமுக நகரம் போன்றவற்றை உருவாக்குவதற்கான நிதிக்காக ராஜபக்ச குடும்பம் பெருமளவு கடன்களை பெற்றது. சீன கடன் என விமர்சகர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

35 வயது வர்த்தகரான எஸ்டி பிரகீத் மதுஸ் இரவு ஆர்ப்பாட்டக்காரர்களுடனேயே தங்கியிருந்தார்.

மக்கள் விலகுங்கள் என தெரிவிக்கும் போது நீங்கள் ஜனநாயக ரீதியில் விலகவேண்டும், மக்கள் தற்போது அவரை ( ஜனாதிபதியை) விரும்பவில்லை என்பது அனைவருக்கும் தெரியும், ஆனால் அவருக்கு விலகிச்செல்வதற்கு விருப்பமில்லை – அதிகாரத்தை கைவிட விருப்பமில்லை என மதுஸ் தெரிவித்தார்.

நான் இங்கேயே தங்கியிருக்க போகின்றேன் எங்கள் பிள்ளைகளிற்கு சிறந்த எதிர்காலத்தை வழங்க வேண்டும் என்றால் நாங்கள கஸ்டப்பட வேண்டும் என அவர் தெரிவித்தார்.