web log free
March 28, 2024

கோட்டாகோகமவில் முதல் மரணம் பதிவு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுக்கு எதிராக இன்று நான்காவது நாளாகவும் காலி முகத்திடலில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், குறித்த போராட்டத்தில் பங்கேற்ற ரப் பாடகர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

 போராட்டத்தில் கலந்துகொண்டு பாடல்களை பாடிக்கொண்டிருந்த பாடகர் ஷிராஸ் யூனுஸ் என்பவரே உயிரிழந்துள்ளார்.

நேற்று இரவு மாரடைப்பு காரணமாக காலி முகத்திடலில் உயிரிழந்த இவர், 1995ஆம் ஆண்டு தொடக்கம் சகோதரமொழியிலான ரப் பாடல்களைப் பாடி வந்தமை குறிப்பிடத்தக்கது.