web log free
December 04, 2025

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முக்கிய அறிவிப்பு

"பெற்றோல் இல்லை" எனப்பரவும் செய்திகளில் உண்மையில்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
 
இதுவரை நாடுபூராவும் உள்ள 1222 பெற்றோலிய நிலையங்களுக்கு அவசியமான எரிபொருள், வழங்கப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரவிக்கப்படுகிறது.
 
இம்மாதம் கடந்த பதினொரு நாட்களுக்கு மட்டும், ஒரு நாளைக்கு பெற்றோல் மெற்றிக் தொன் 4200 படி வழங்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் குறிப்பிட்டு உள்ளது.
 
இதனிடையே சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 10000 லீட்டர் எரிபொருள் தற்போது பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலி கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd