web log free
March 29, 2024

காலி முகத்திடல் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பூஜை நடத்திய பூசகர் மீது தாக்குதல்

காலி முகத்திடல் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கோவிலில் பூஜை வழிபாடுகள் நடத்திய பூசகர் மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். 

பொலன்னறுவை - யக்குரே பகுதி கோவிலில் இந்த பூஜை இடம்பெற்றுள்ளது. 

இந்நிலையில் நேற்று கோவிலுக்குச் சென்ற இனந்தெரியாத நபர்கள் பூசகர் மீது தாக்குதல் நடத்தி கோவிலுக்கும் சேதம் ஏற்படுத்தி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.