web log free
September 05, 2025

அந்த தனி விமானத்தில் சென்றது பசில் இல்லையாம்!

இன்று காலை இரத்மலானை விமான நிலையத்தின் ஊடாக இலங்கையை விட்டுச் சென்றதாக வதந்தி பரவிய முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ கோவிட்-19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் இருப்பதாக விமான நிலைய வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் பணிப்பாளர் ஷெஹான் சுமனசேகரவை தொடர்பு கொண்டு கேட்டபோது, பசில் மூன்று முக்கிய விமான நிலையங்களான BIA, மத்தல மற்றும் இரத்மலானை ஊடாக பசில் நாட்டை விட்டு வெளியேறவில்லை எனவும், அத்தகைய வதந்திகள் பொய்யானவை எனவும் உறுதிப்படுத்தினார்.

இன்று காலை இரத்மலானை விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட தனியார் ஜெட் விமானத்தில் இரண்டு வெளிநாட்டு பிரஜைகள் மற்றும் பணியாளர்கள் இருந்ததாகவும், முன்னாள் நிதியமைச்சரை அதில் செல்லவில்லை என்றும் ஷெஹான் கூறினார்.

கோவிட்-19 தொற்றுடன் நேற்று அனுமதிக்கப்பட்ட பசில் தற்போது கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக ஆதாரங்கள் மேலும் உறுதிப்படுத்தியுள்ளன.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd