web log free
April 26, 2024

நாளை மின்வெட்டு நேரம் அதிகரிப்பு

மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு போதிய எரிபொருள் மற்றும் நீர் இல்லாத காரணத்தினால் நாளை (18) 4 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

A-W வரையிலான 20 வலயங்களில் காலை 9.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை 3 மணி நேர இடைவெளியிலும், மாலை 6.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை ஒரு மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.