web log free
April 30, 2025

எச்சரிக்கை!!! கடாபியின் நிலைதான் ராஜபக்ஷக்களுக்கும்!

இப்போது செய்ய வேண்டியது, அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து ஆறு மாதங்கள் அல்லது ஒரு வருட காலத்திற்கு இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதுதான் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜெ.சி.அலவத்துவல தெரிவிக்கின்றார்.

அதற்கு பதிலாக மீண்டும் அமைச்சரவையை நியமிக்கும் செயற்திட்டத்தை திமிர்பிடித்த அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அவர்களின் ஆணவ ஆட்சி தொடருமானால், லிபியாவில் கடாபிக்கு ஏற்பட்ட கதியே ராஜபக்சக்களுக்கும் ஏற்படும் என அவர் எச்சரித்தார். 

ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd