web log free
April 20, 2024

கோட்டாபய நாடு திரும்பினார்

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ச அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த நிலையில் நாடு திரும்பியுள்ளார்.

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக இன்று காலை 8 மணியளவில் அவர் நாடு திரும்பியுள்ளார்.

அமெரிக்கா சென்ற முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்சவுக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றில் இரண்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

கொலை செய்யப்பட்ட, சன்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் புதல்வி உள்ளிட்ட இருவரால் இந்த வழங்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபய ராஜபக்ச தனது அமெரிக்க விஜயத்தின் போது அமெரிக்காவில் வசிக்கும் இலங்கை நிபுணர்களை சந்தித்து, அரசியல் நிலவரம் குறித்தும் தெளிவுபடுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Last modified on Wednesday, 11 September 2019 01:51