web log free
September 08, 2024

தற்போதைய அரசாங்கத்தை காப்பாற்றும் வகையில் ரணில் முன்வைத்துள்ள கோரிக்கை

நிதியமைச்சர் சர்வதேச நாணயநிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் குறித்து நாடாளுமன்றத்திற்கு தெரியப்படுத்திய பின்னர் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவரவேண்டும் என முன்னாள் பிரதமர் ரணில்விக்கிரமசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அதுவரையில் நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து விவாதிப்பது அர்த்தமற்றது என அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் சாத்தியமான நிதிதிட்டத்தை முன்வைக்கும்வரை சர்வதேச நாணயநிதியத்தினால் இலங்கைக்கான துரித நிதி உதவியை வழங்க முடியாது என முன்னாள் பிரதமர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய நெருக்கடிக்கான தீர்வுகளை பிரதமரும் ஜனாதிபதியும் நாடாளுமன்றத்திற்கும் மக்களிற்கும் சமர்ப்பிக்கவேண்டும் எனவும் அவர்தெரிவித்துள்ளார்.

113 பெரும்பான்மையுடன் அரசாங்கத்தினால் இந்த நெருக்கடிக்கு தீர்வை காணமுடியாது என தெரிவித்துள்ள அவர் 1977 ம் ஆண்டுடன் நிலைமையை ஒப்பிட்டுள்ளதுடன் 175 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவில்லாமல் அரசாங்கத்தினால் தற்போதைய நெருக்கடிக்கு தீர்வை காணமுடியாது எனவும் தெரிவித்துள்ளார்.