web log free
April 26, 2024

வரட்சியால் 19 மாவட்டங்கள் பாதிப்பு

வரட்சியான காலநிலை காரணமாக19 மாவட்டங்களில் 548905 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் அதிகளவானவர்கள் களுத்துறை மாவட்டத்திலேயே பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவி பணிப்பாளர் பிரதிப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

களுத்துறை மாவட்டத்தில் மாத்திரம் 244065 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த மாவட்டங்களில் காணப்படும் நீர்நிலைகளின் நீர்மட்டம் பாரியளவில் குறைவடைந்தமை காரணமாக மக்கள் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கோகலை, புத்தளம், குருநாகல், யாழ்ப்பாணம், கண்டி உள்ளிட்ட மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் வரட்சியான காலநிலை காரணமாக கடும் பாதிப்பினை எதிர்கொண்டுள்ளனர்.