web log free
March 29, 2024

ஐந்து நாட்கள் பார்வையிடலாம்

தமிழ் - சிங்கள புதுவருடத்தை முன்னிட்டு சிறைச்சாலையில் உள்ள கைதிகளை பார்வையிடுவதற்கு அவர்களுடைய உறவினர்களுக்கு இம்முறை 5 நாட்கள் பெற்றுக்கொடுக்க சிறைச்சாலைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கு முன்னர், தமிழ் - சிங்கள புதுவருடத்தை முன்னிட்டு சிறைச்சாலையில் உள்ள கைதிகளை பார்வையிடுவதற்கு புதுவருட தினம் உள்ளிட்ட இரண்டு நாட்கள் அனுமதி வழங்கப்பட்டது.

எனினும், அன்றை நாட்களில் காணப்படும் போக்குவரத்து குறைபாடுகளை கருத்தில்கொண்டு, அதனை 5 நாட்களாக அதிகரிக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, ஏப்ரல் 13ஆம் திகதி முதல் 17ஆம் திகதிவரை சிறைச்சாலையில் உள்ள கைதிகளை பார்வையிடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் ஜயசிறி தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.